Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

இனப்படுகொலைசெய்யப்பட்டஉறவுகளைநினைவுகூர 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்காலில் கூடுமாறுவிக்னேஸ்வரன் வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதிநடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டுபடுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறுவேண்டுகோள் விடுத்திருக்கும் வடமாகாணமுன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமானநீதியரசர் விக்னேஸ்வரன், தானும் அன்றையதினம் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாகதெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வுஎதிர்வரும் 18 ஆம் திகதிமுள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் எனமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமானசுயஅரசியல் நோக்கங்களும் இன்றி இந்தநிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடுசெய்துள்ளமைமகிழ்ச்சிஅளிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புஏற்பாடுகள் காரணமாகமக்கள்மத்தியில் ஒருவிதஅச்சநிலைமைஇன்றுஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமதுஉறவுகளுக்குஅஞ்சலிசெலுத்துவதற்கும் அவர்களுக்கான நீதிக்காக குரல் கொடுப்பதற்குமாக முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18 ஆம் திகதிஒன்று கூடுவதற்குநாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

தமதுஉறவுகளை இழந்தமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர்விட்டுஅழுது தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் இருக்கின்றது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களின் பின்னர் சர்வதேசசமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்துதிசைதிரும்பியிருக்கின்றநிலையிலும்,அரசாங்கம் தற்போதைய சூழ்நிலைகளை எமக்கு எதிராகப் பல்வேறுவழிகளிலும் பயன்படுத்தி வருகின்ற நிலையிலும், எமதுஉரிமைகள் தொடர்பிலும் எமக்கு கிடைக்க வேண்டிய நீதிதொடர்பிலும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதைஎடுத்துக்காட்டவேண்டியஅவசியம் இன்றுஎமக்கு இருக்கின்றது.

இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு இருக்கின்றபிரச்சினைபல நூற்றாண்டுகளுக்குமுற்பட்டவரலாற்றுடன் தொடர்புபட்டது. நாடுகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படக் கூடியபோர்களும், சர்வதேச பயங்கரவாத சக்திகளினால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நாசகாரசெயற்பாடுகளும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான நீண்ட கால நியாயமான போராட்டத்தையும் இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தையும் பாதித்துவிடக்கூடாது.

இது சம்பந்தமாகபொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியதேவைசர்வதேசசமூகத்துக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ளஎல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சட்டம் சமனானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் சுயநிர்ணயஉரிமையினைநிலைநாட்டும் வகையிலும் உச்சபட்சஅதிகாரம் கொண்டசமஸ்டி கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமான அமைதியைஏற்படுத்தும் என்பதை ஐ.நா மற்றும் சர்வதேசசமூகம் ஆகியவை புரிந்து கொண்டுஉடனடியாகநடவடிக்கைகளைஎடுக்கவேண்டும். ஒன்பதுமாகாணங்களுக்கும் நிரந்தர சுயாட்சி உரித்தை வழங்குவதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் எந்த இரண்டுஅல்லதுஅதற்குமேற்பட்டமாகாணங்களும் இணைந்துசெயற்படமுன்வந்தால் அவ்வாறான இணைப்புக்குச்சட்டத்தில் இடமளிக்கப்படவேண்டும். வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனியலகொன்றை வழங்க வேண்டும் என்பதேஎமதுகோரிக்கை. இவற்றை அரசாங்கமும் எதிர்க்கட்சியினரும் சர்வதேசசமூகமும் கவனத்திற்குஎடுக்கவேண்டும்.

ஆகவே இவ்வருடமுள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வினைமிகவும் அமைதியானமுறையிலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்குஅமைவாகவும்இனப்படுகொலைநிகழ்த்தப்பட்டமுள்ளிவாய்க்கால் மண்ணில் நின்றுநாம் அஞ்சலிசெலுத்திநடத்துவதுஅவசியமாகியுள்ளது. அத்துடன் சர்வதேச சமூகத்துக்கு எமதுசெய்தியினைக் கூறுவதும் இந்தச்சமயத்தில் அவசியமாகியுள்ளது.எனவேதான் சர்வதேசசமூகத்தின் கடப்பாடுபற்றி இங்குநாம் குறிப்பிட்டிருந்தோம்.

கடந்தகாலங்களைப்போலமாணவர்கள் இந்தநிகழ்வில் கலந்துகொண்டுஉரிமைகள் மற்றும் நீதிஆகியவைதொடர்பில் தமதுஉறுதியானநிலைப்பாடுகளைவெளிப்படுத்துவதுஅவசியமாகின்றது. அன்றையதினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv