Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம்.

அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும் அக்கட்சி கூறுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபொது அக்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …