Wednesday , April 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலுடன் இணைய மாட்டோம்! சு.கவின் முக்கியஸ்தர்கள் பிடிவாதம்…

ரணிலுடன் இணைய மாட்டோம்! சு.கவின் முக்கியஸ்தர்கள் பிடிவாதம்…

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

பதுளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணையாது என அவர் கூறியுள்ளார்.

எதிர்த்தரப்பிலிருந்து யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் வரை, தமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிடபோவதில்லை எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv