Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார்.

சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளில் மீள்வருகை குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …