எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்
நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு மக்கள் பேரணியில் கலந்துகொள்ல வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான் என்றும், அவர்கள் பேரணிக்கு வந்திருந்தால், கலந்து கொண்ட மக்களை பார்த்திருக்கலாம் எனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.