Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் !!

கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் !!

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதென குறிப்பிட்டுள்ள சுரேஸ், ஏற்கனவே கொடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கால அவகாசத்தில் உருப்படியாக அரசு எதையும் செய்யவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அரசாங்கம் எதனையும் நிறைவேற்றாமல் விட்டுவிடும் நிலையும் காணப்படுகின்றதென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv