Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வேதனையில் திலீபனின் மனைவி: ஆங்கில ஊடகம்

வேதனையில் திலீபனின் மனைவி: ஆங்கில ஊடகம்

தமது பெண் குழந்தையை வளர்ப்பதற்கு தந்தையின் உதவி அவசியம் இந்தநிலையில் தமக்கு வேறு வழிகள் எவையும் தெரியவில்லை என்று கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தமது கணவரின் பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வீசா அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கையரான திலீபன் ஞானேஸ்வரன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரை பிரிந்த நிலையில் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அவருடன் மேலும் 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டநிலையில் நேற்று காலை கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டனர்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …