தமது பெண் குழந்தையை வளர்ப்பதற்கு தந்தையின் உதவி அவசியம் இந்தநிலையில் தமக்கு வேறு வழிகள் எவையும் தெரியவில்லை என்று கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் தமது கணவரின் பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வீசா அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கையரான திலீபன் ஞானேஸ்வரன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரை பிரிந்த நிலையில் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவருடன் மேலும் 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டநிலையில் நேற்று காலை கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டனர்.