Thursday , April 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக வாள்வெட்டு, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

இந்நிலையிலேயே, பொது மக்களின் நலன் கருதி பொலிஸார் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv