Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் அரா­லிப் பகு­தி­யில் கடந்த சில வாரங்­க­ளாக வீடு­கள் மீது கல்­வீச்சு தாக்­கு­தல் நடை­பெற்று வந்த நிலை­யில் தற்­போது நவா­லிப் பகு­திக்­கும் அது பர­வி­யுள்­ளது.

நவாலி வடக்கு, சங்­க­ரத்தை பிர­தான வீதி­யில் கேணி­ய­டிப் பகு­தி­யி­லுள்ள வீட்­டின் மீது நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் சர­மா­ரி­யாக கற்­கள் வீசப்­பட்­டுள்­ளது.

வீட்­டின் சீற் உடைந் துள்­ளது. தெய்­வா­தீ­ன­மாக வீட்­டில் உள்­ள­வர்­க­ளுக்கு காயம் ஏற்­ப­ட­வில்லை.

அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த பிர­தேச சபை உறுப்­பி­னர் வன்­னி­ய­சே­க­ரம் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது, எனது வீட்­டி­லி­ருந்து மூன்று வீடு­க­ளுக்கு அப்­பால் உள்ள சகோ­த­ரி­யின் வீட்­டின் மீதே கல்­வீச்சு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சகோ­த­ரி­யின் மகள் வீட்டு யன்­னல் ஊடாக, மதி­லின் மேலாக இனந்­தெ­ரி­யாத சிலர் சிவப்பு நிற வெளிச்­சத்­து­டன் ஏறிக் குதிப்­பதை அவ­தா­னித்­துள்­ளார்.

சிறிது நேரத்­தில் வீட்­டின் மீது கல் வீச்­சுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வீட்­டில் இருந்­த­வர்­கள் சத்­த­மி­டவே 25 மேற்­பட்ட இளை­ஞர்­கள் அங்கு திரண்­ட­னர். தேடு­தல் நடத்­தி­ய ­போ­தும் எவ­ரும் சிக்­க­வில்லை.

நாளை காலை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­னர் என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv