Friday , April 19 2024
Home / Tag Archives: ரஷ்யா

Tag Archives: ரஷ்யா

சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்

போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக …

Read More »

பழிவாங்கும் எண்ணத்துடன் மூண்டுள்ள பனிப்போர்

ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்களின் அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்று குட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலால் உருவாகியுள்ள மோசமான நிலைமையில் கூடிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தின் தொடக்கத்தில் குட்ரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். …

Read More »

போர் பதற்றத்தில் ரஷ்யா

சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினறனர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். ஆனால், ரசாயன் தாக்குதலை …

Read More »

முடிவுக்கு வந்த சிரியா போர்: ரஷ்யா தகவல்…

சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. இந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சிரிய அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நடைபெற்று வந்தது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் ஏராளமான அப்பாவி மக்கள், குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது கிழக்கு கவுட்டா பகுதி முழுவதும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் …

Read More »

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னஇ ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும்இ இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளைஇ இழுபறிக்குள்ளாகியிருக்கும்இ ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை …

Read More »

ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!

ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான …

Read More »

ரஷ்யா சென்ற நாமல்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Read More »

சிறுமியை பாலியல் அடிமையாக்கிய பெற்றோர்

ரஷ்யாவில் தனது சொந்த மகளை பெற்றோர்கள் பாலியல் அடிமையாக நடத்தி வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 வயதான சிறுமியை கடந்த ஒரு வருடமாக அவளது பெற்றோர்கள் பாலியல் அடிமையாக வைத்து துன்புறுத்தி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவளது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவிடாய் கோளாறு காணமாக மருவத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமி கன்னித்தன்மையை இழந்து …

Read More »

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5

அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று காலை 9.53 மணிக்கு வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. அக்னி-5 ஏவுகணை 5000 கி.மீ தூரம் வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மிக நீண்ட தூதரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்து சென்று எதிரிகளின் இடத்தை தாக்கக்கூடிய வல்லமை படைத்தது அக்னி-5. அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் …

Read More »

விண்வெளியில் அணு ஆயுதம் அமெரிக்காவின் அடுத்த பேரிடி…

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த திட்ட தொடர்பான சாத்திய கூறுகளை கண்டறியுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் …

Read More »