Friday , March 29 2024
Home / Tag Archives: மு.க.ஸ்டாலின்

Tag Archives: மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அனைத்து கட்சிகளிலும் தங்கள் சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஏற்கனவே தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளும் …

Read More »

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு நிச்சயம் தேவை.மு.க.ஸ்டாலின்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோருக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35–வது கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள …

Read More »

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் 60 ஆண்டுகள் பணியாற்றியதையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி – கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் …

Read More »

அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக …

Read More »

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை …

Read More »

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை – மு.க.ஸ்டாலின்

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க …

Read More »

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் …

Read More »

பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. …

Read More »

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் பேசிவரும் மு.க.ஸ்டாலின் – தினகரன் குற்றசாட்டு

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேசிவருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். சென்னை ராயப்பேட்டையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்பேன். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஆர்.கே நகரில் யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடம் கேட்டுபாருங்கள். தமிழகத்தில் அ.தி.மு.கவை ஒழித்து விட வேண்டும் என சில செயல்படுகிறார்கள். ஆட்சியை …

Read More »