இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது …
Read More »