கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு …
Read More »இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா?
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம். சமீபத்தில்தான் தினகரன் தனது …
Read More »ஆட்சி அதிகாரம் உங்க கையில இருந்தா நீங்க யார வேணும்னாலும் அடிக்கலாமா?
ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் …
Read More »உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை மறுநாள் (11-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை மந்திரி …
Read More »மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் – வாகை சந்திரசேகர்
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் – வாகை சந்திரசேகர் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் என்று வாகை சந்திரசேகர் பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தங்கசாலை மணிக்கூண்டு அருகில் டி.லோகேஷ் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் வாகை சந்திரசேகர் …
Read More »