பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் விசேட சமயபூஜைகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களுக்கு பிரதமர் சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் பிரதமரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
1949ஆம் ஆண்டு பிறந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1977ஆம் ஆண்டு முதலாவது தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்திருந்தார்.
நாட்டின் பத்தாவது பிரதமராக பதவி வகித்துக்கொண்டிருக்கும் இவர், ஏற்கனவே இரண்டு தடவைகள் இப்பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.