Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!

கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!

கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பதுளையில் திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தின் பதாகையை இனம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் , பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயம் கடந்த 12ம் திகதி திறக்கப்பட்ட நிலையில், காரியாலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான பதாகையை இனம்தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

அதில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, பெரமுனவின் பதுளை அமைப்பாளர் தேனுகா விதானகமகேவின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் தேனுகா விதானகமகேவின் புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த நான்கு இளைஞர்கள் அலுவலகத்தில் இருந்த காவலாளியை அச்சுறுத்தி விட்டு, பதாகையை கிழித்ததாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்லதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …