சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிப்பு
இன்று காலை முதலே சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலலிதா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு காணப்படுகிறது. ஜெயலலிதா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, இன்று மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளார் என தகவல் வெளியானது.
முதல்வர் பன்னீர்செல்வம், ஏழு நாட்களுக்கு பிறகு இன்று தலைமை செயலகம் சென்றார். பன்னீர்செல்வம் வீடு, போயஸ் கார்டன் வீட்டில் கூட்டம் காணப்பட்டது. அதே போல், லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திலும் கூட்டம் காணப்பட்டது.
அங்கு சசிகலா ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் கேட்ட போது, பாதுகாப்புக்காக நிற்கிறோம் என்றனர். அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி நடக்கலாம் என்ற பீதியில் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது.