Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!

மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை அரசாங்கம் ஏமாற்று செயற்பாடுகளை தான் மேற்கொள்கின்றதென வலியுறுத்தினோம்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரி தற்போது செயற்பட்டுள்ளார்.மேலும் இலங்கை மீது ஐ.நா வைத்திருந்த நம்பிக்கையை ஜனாதிபதி மைத்திரி சிதைவடைய செய்துவிட்டார்” என உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv