சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் செயற்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்களே இலங்கையில் குண்டுவெடிப்புக்களை திட்டமிட்டார்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு இலங்கையில் உள்ள சர்வதேச ஜிகாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் இலங்கை திரும்பிய உள்ளூர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னர் ஐ.எஸ் அமைப்பினர் உறுப்பினர்களை சிரியா ஈராக்கிற்கு வருமாறு அழைத்தனர் தற்போது சொந்த நாடுகளில் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய நாடுகளிற்கும் பொருந்தக்கூடியவை எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.