Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!

ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!

ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இல­குவில் வெற்­றி­கொள்ள கூடி­ய­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான கட்­சிகளின் ஆத­ரவை பெற்­ற­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவை இவ்­வா­ரத்­துக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விப்பார் என்றும் சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் மறை­மு­க­மான இணக்­கத்தை தெரி­வித்­துள்­ள­தா­கவும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். அவ்­வாறு எந்­த­வொரு பிளவும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் கிடை­யாது. கட்­சியில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு நிலைப்­பாடு உள்­ளது.

அதையே அவர்கள் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். அதை கட்­சியின் பிளவு என அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்ளக் கூடாது. எவ்­வாறு இருப்­பினும் கட்­சியின் இறுதித் தீர்­மா­னத்­திற்கு உடன்­பட்டு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வார்கள்.

சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க இடம் கொடுக்க மாட்டார் என பேசு­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ருக்கோ அல்­லது அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கோ கட்­சியை தோல்வி நோக்கி கொண்டு செல்லும் எண்ணம் கிடை­யாது. அவர்­க­ளுக்கும் கட்­சியை வெற்­றிப்­பெற செய்­யவே வேண்டும் எனவே கையில் உள்ள வெற்­றியை தவ­ற­விட அவர்கள் விரும்­ப­மாட்­டார்கள்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க மாட்டார் அதை என்னால் உறு­தி­யாக கூற முடியும். அவர் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் அந்த முடிவை எடுக்­க­வில்லை. இம்­முறை தேர்­தலில் சஜித்தை கள­மி­றக்கி இல­கு­வான வெற்­றியை பெறு­வ­தற்கு வழி­ய­மைத்­துக்­கொ­டுப்பார்.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்தை சுமு­க­மான முறையில் முடி­வ­டைந்­துள்­ளது.

அந்த பேச்­சு­வார்த்­தையின் போது எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றிப்­பெ­று­வ­தற்­கான வியூ­கங்கள் குறித்து பிர­தமர் சஜித்­திற்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் இணக்­கப்­பாட்­டையும் பிர­தமர் எதிர்­பார்க்­கின்றார். அதனால் அவர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கத்தை பெறு­மாறு சஜித்தை அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதை அடிப்­ப­டை­யாக கொண்டு நோக்கும் போது சஜித்தை கள­மி­றக்க பிர­தமர் மன­த­ளவில் இணங்­கி­யுள்­ளமை புல­னா­கின்­றது. இதை அவர் மறை­மு­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பிர­த­மரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்வாரத்துக்குள் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …