Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மின்சார லிப்டில் சிக்கி உயிருக்கு போராடிய ரணில்? அதிர்ச்சி தகவல்

மின்சார லிப்டில் சிக்கி உயிருக்கு போராடிய ரணில்? அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்றத்தில் உள்ள மின்சார லிப்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிக்கித் தவித்ததாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற மின்சார லிப்டில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக் கொள்வதற்கு முன்னரே பிரதமரும் சிக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த லிப்டில் இடையில் நின்றமை தொடர்பான அனைத்து காணொளிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவொரு சூழ்ச்சி நடவடிக்கையோ அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதோ அல்ல என்றும் குறித்த நாடாளுமன்ற அதிகாரி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.லிப்ட் இடைநடுவில் பழுதடைந்தமையினால் சுமார் 15 நிமிடங்களாக 12 உறுப்பினர்களும் லிப்டில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv