Thursday , March 28 2024
Home / அரசியல் / மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா

மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார்.
இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை அதிபர் ஆகியோரை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் , பின்னர் பெரு நாட்டுக்கு சென்று அங்கு பெரு நாட்டு அதிபர் , துணை அதிபர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேற்கண்ட நாடுகளுக்கு பயணத்தை முடித்துவிட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv