Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி

மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv