மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை.
எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.