Wednesday , April 10 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை

ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், ஆளுந்தரப்பு சார்பில் கலந்துகொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரினார். அதற்கு பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்ட சபாநாயகர், ஜனநாயகத்தை பாதுகாத்து, எதிர்கால சந்ததிக்கு நாட்டை சிறந்த முறையில் ஒப்படைக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு உண்டு எனக் குறிப்பிட்டார்.

அந்தவகையில், விஜேதாச ராஜபக்ஷவின் வேண்டுகோள் தொடர்பாக கவனஞ்செலுத்துவதாகவும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த வழியேற்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv