நம்பிக்கையை குறையச் செய்யும் வகையில் இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் அமைவதாக மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் என தாம் நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசு, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் என நம்பிக்கையுள்ளது. அரசின் தற்போதைய செயற்பாடுகள் அந்த நம்பிக்கையை தளரச் செய்துள்ளது.
இநநிலையில், இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் அந்த நம்பிக்கையை தக்கவைக்க முடியாது. கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மதகலவரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமான செயற்பாடு.
கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றார்.