Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!

ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் காரணமாக சிறிசேன குழப்பமடைந்துள்ளார் என்பதற்கான சமிக்ஞையே இந்த சந்திப்பு என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பிரதமருடனான சந்திப்பின்போது இந்திய பிரதமர் இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களின் வேகம் குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv