சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)
புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னம்மா நல்லதம்பி 10.11.2017 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும் சின்னையா பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற நல்லதம்பியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் முத்துத்தம்பி மற்றும் ஐயம்பிள்ளை காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சாரதி – -C.T.B) மற்றும் மாணிக்கவாசகர், கனகரெத்தினம்(சுவிஸ்), பத்மநாதன், வரதலெட்சுமி, பத்மாவதி காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்றவர்களான அமராவதி, பொன்னம்மா, கார்த்திகேசு, கந்தையா மற்றும் தம்பையா (கனடா) காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பங்கயற்செல்வி மற்றும் புஸ்பம், வாலாம்பிகை, விமலா, சரஸ்வதி காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கைலாயநாயகி ஆகியோரின் மாமியாரும் பகீரதன், குருபரன், கோபிநாத், பிரசாந்தி, பிரசாந்தி, காயத்திரி, தயாநிதி, கிருசா, கவிதாஸ் காலஞ்சென்ற மனோகரன் மற்றும் பிரசன்னா, பிரியா, கயந்தன்(கனடா), பிரதீபன், டயானா, கபில்ராஜ் (கட்டார்), குபேரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் கரீஸ், அக் ஷரா, அக் ஷை,ஷாமிசன், பிரதீஸ், கன்சிகா, சாருஜன், வர்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.11.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மணற்காடு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
புங்குடுதீவு 3ஆம் வட்டாரம்
புங்குடுதீவு 3ஆம் வட்டாரம்
10.11.2017
12.11.2017