Thursday , April 25 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடாளுமன்றத்தை புறக்கணித்த மைத்திரி

நாடாளுமன்றத்தை புறக்கணித்த மைத்திரி

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணயிலிருந்து இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தே இன்றைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, குழுநிலை விவாதங்களின்போது தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்படுமா எனும் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இன்றைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv