Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்

மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்

தவ­றான புரி­தலை மீள் திருத்­தும் வகை­ யில் டில்­லிச் சந்­திப்­பு­கள் அமை ந்­தன. அது மாத்­தி­ரம் அல்­லாதுஇலங்கை – இந்­திய உறவை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இந்­தி­யப் பய­ணம் அமைந்­தது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

கடந்த 10ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பார­திய ஜன­தாக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­ன­ரான சுப்­ர­மணி சுவா­மி­யின் அழைப்­புக்கு அமை­வாக மூன்று நாள் பய­ணத்தை மேற்­கொண்டு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச உள்­ளிட்ட குழு டில்லி சென்­றி­ருந்­தது.

இந்­தப் பய­ணம் தொடர்­பாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மகிந்த ராஜ­பக்ச இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் பய­ணத்­தின்­போது இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, முன்­னாள் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மன்­மோ­கன் சிங், காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ராகுல் காந்தி உள்­ளிட்ட அர­சி­யல் பிர­மு­கர்­க­ளு­டன் மிக சிநே­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன.

இந்­தப் பய­ணத்­தின் ஊடா­கப் பல புதிய மாற்­றங்­கள் ஏற்­ப­டும் சாத்­தி­யப்­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யப் பய­ணத்தை நிறைவு செய்து வெற்­றி­யு­டன் நாடு திரும்­பி­யுள்­ளோம் என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv