தவறான புரிதலை மீள் திருத்தும் வகை யில் டில்லிச் சந்திப்புகள் அமை ந்தன. அது மாத்திரம் அல்லாதுஇலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியப் பயணம் அமைந்தது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணி சுவாமியின் அழைப்புக்கு அமைவாக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழு டில்லி சென்றிருந்தது.
இந்தப் பயணம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் மிக சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்தப் பயணத்தின் ஊடாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. இந்தியப் பயணத்தை நிறைவு செய்து வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.