Thursday , April 25 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்

தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்

வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். படையினர் தமது உயிர்களை தியாகம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்டனர். சிலர் நாங்கள் ஆணையிறவுக்கு செல்ல மாட்டோம் பாமன்கடைக்கு செல்வோம் என கேலிசெய்தனர்.

20 வீதத்தினால் வரியை குறைத்து காட்டுமாறு சவால் விடும் நபர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். போரை முடிவுக்கு கொண்ட வந்த எனக்கு வரியை 20 வீதமாக குறைப்பதில் எந்த சவாலும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv