தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ்.
அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
எம்.எல்.ஏ. கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவிடப்பட்டுள்ளது.