Friday , April 19 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘அ.தி.மு.கவில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஒட்டு மொத்தமாக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று ஓரணியில் நிற்கிறார்கள். இந்த இயக்கத்தை கூறு போட சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது.

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென மனம் மாறியதற்கான பின்னணி என்ன? அவரால் அ.தி.மு.க வை கைப்பற்ற முடியாது. அரியணை ஏறவும் முடியாது. சசிகலா பின்னால் நாங்கள் நிற்கிறோம்.

இந்த இயக்கத்தை விட்டு யார் சென்றாலும் அவர்கள் செல்லாகாசு ஆகிவிடுவார்கள். கவர்னர் காலதாமதத்தை தவிர்த்து ஐனநாயகத்தை காக்கும் வகையில் சசிகலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்.

அப்படி செய்ய தவறினால் அடுத்த கட்ட தேவையான நடவடிக்கையை சசிகலா மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …