Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­சமைப்­பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல், அரச கரும மொழி­கள் மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கனே­சன் தெரி­வித்­தார்.

ஐ. டப்­ளியூ.பி.ஆர். எனப்­ப­டும் போர் மற்­றும் சமா­தா­னம் தொடர்­பி­லான அறிக்­கை­யி­டல் கற்கை நிலை­யம் சார்­பாக, அமைச்­சர் மனோ கணே­சனை அமைச்­சில் நேற்றுச் சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­சமைப்­பைக் கொண்­டு­ வ­ரு­வ­தில் தலைமை அமைச்­ச­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் எந்த ஆர்­வ­மும் இல்லை. புதிய அர­சமைப்­பு என்­பது சாத்­தி­ய­மற்­றது.

எனது அமைச்­சூ­டாகப் புதிய அர­சி­யல் அமைப்­பில், சிங்­க­ளம், தமிழ் ஆகிய இரு அரச கரும மொழி­க­ளுக்­கும் சம­னான நிலை­யை உறுதி செய்­யும் வித­மாகக் கொண்­டு­வர இருந்தத் திருத்­ததை 21ஆம் அர­சமைப்­புத் திருத்­தம் ஊடாகக் கொண்­டு­வர உத்­தே­சித்­துள்­ளேன். அதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை சமர்ப்­பித்து நட­ வ­டிக்­கை­யை மேற்­கொள்­ளு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றது.

எமது அர­சமைப்­பில் அரச மொழி குறித்த அத்­தி­யா­யத்­தில், முத­லில் சிங்­கள மொழி அரச மொழி­யாக எழு­தப்­பட்­டுள்­ளது. அடுத்த வரி­யில் தனி­யா­கவே தமிழ் மொழி­யும் அரச கரும மொழி என கூறப்­பட்­டுள்­ளது. தமிழ் மொழி­யும் அரச கரும மொழி என கூறப்­பட்­டி­ருப்­ப­தன் ஊடாக தமிழ் மொழிக்­கு­ரிய சம தகு­தி தொடர்­பில் சிறு சிக்­கல் உள்­ள­தாக தோன்­று­கின்­றது.

புதிய அர­சமைப்­பு ஊடாக இதனை திருத்தி சிங்­கள, தமிழ் மொழி­கள் அரச கரும மொழி என எழுத உத்­தே­சித்­தி­ருந்­தோம். எனி­னும் தற்­போ­தைய சூழ­லில் புதிய அர­சமைப்­பு கொண்டு வரப்­ப­ட­மாட்­டாது.

ஆட்­சி­யா­ளர்­கள் அர­சி­யல் யாப்பை கொண்டு வரு­வ­தில் எந்த அக்­க­றை­யை­யும் காட்­ட­வில்லை.நாம் உத்­தே­சித்த அர­சமைப்­பு திருத்­தத்தை, 21 ஆம் அர­சி­யல் திருத்­தம் ஊடாக கொண்டு வந்து சிங்­கள, தமிழ் மொழி­யின் சமத்­து­வத்தை உறுதி செய்ய உத்­தே­சித்­துள்­ளோம்.

தற்­போது சிங்­கள, தமிழ் மொழி­க­ளில் அரச நிர்­வா­கங்­க­ளில் சேவையை வழங்க போதிய ஆளணி இல்­லாத நிலை­யில், மொழி ஒருங்­கி­னைப்­பா­ளர்­களை மிக விரை­வில் அது தொடர்­பில் நிய­மிப்­போம். அதற்­கான ஆரம்ப கட்ட வேலை­கள் தற்­போ­தும் இடம்­பெற்று வரு­கி­றது .ஒரு குறிப்­பிட்ட பிரி­வுக்கு பயிற்­சி­க­ளும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன – என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv