Friday , April 26 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நான் ஜனாதிபதியாகியிருந்தால்….! பொன்சேகா வெளியிட்ட அதிரடி கருத்து!

நான் ஜனாதிபதியாகியிருந்தால்….! பொன்சேகா வெளியிட்ட அதிரடி கருத்து!

அமெரிக்காவில் அரச தலைவர்கள் மன நல மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வதுபோல இலங்கையிலும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.இதுதொடர்பில் மேலும் கூறிய அவர்,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைப்பற்றி கடந்த கூட்டத்தில் சொன்னாராம். அதாவது பொன்சேகா ஆகிய நான் ஜனாதிபதியாக வந்திருந்தால் இப்படியெல்லாம் கட்சித் தலைவர்களை அழைத்துச் சந்தித்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் சொன்னாராம்.

அவருக்கு சொல்வது இதுதான், நான் ஜனாதிபதியானால் இப்படி நடக்கமாட்டேன். என்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்திருக்கமாட்டேன். இரவு ஒரு கதையும் பகல் இன்னொரு கதையும் பேசமாட்டேன். பயந்து பயந்து எல்லாம் வாழமாட்டேன். அமெரிக்காவில் உள்ளது போல அரச தலைவர்களை மன நல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும் சட்டம் நிறைவேற்றப்படவேண்டும்.” என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv