Thursday , March 28 2024
Home / முக்கிய செய்திகள் / பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் லெப்டினன்ட் கேணல் அதிகாரி Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என் இம்மனுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை, எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலின் போது ‘ஹீரோ’ வாக செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அரச மரியாதை செலுத்தப்படும்!’ என் மக்ரோன் குறிப்பிட்டார். ஆனால் நிகழ்த்தப்படும் திகதி குறித்து எவ்வித தகவல்களும் மக்ரோன் வெளியிடவில்லை.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, வரும் வாரத்தின் இறுதிக்குள் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என அறியமுடிகிறது. அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்த ஏனையவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv