வடக்கு முதலமைச்சரை பதவி நீக்கப்படமாட்டார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் அந்தப் பதவியில் இருப்பதும்,பதவி விலகுவதும் அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள பொன்சேகா முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது கடமைகளை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று கடுவல நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு முதலமைச்சர் என்ற ரீதியில் அவர் குறித்த பிரதேசத்தில்தனியான சட்டத்தை அமுல்படுத்த கூடிய அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்றும் அமைச்சர் பொன்கேசா தெரிவித்துள்ளார்.
மேலும் இனவாதத்தினை பரப்பும் தேரரை கைதுசெய்யாமையானது பலவீனத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.