பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் போது தடை கோருவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.