Friday , March 29 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார்.

இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்” என்று கூறினார். அதற்கு பதில் கூறிய பொன். ராதாகிருஷ்ணன் “ஜமுக்காளத்தில் கலப்படம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

பாஜகவும், தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது எனக் கூறி வந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், ஓ.பி.எஸ்-ற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “ பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்” என கருத்து தெரிவித்தார்.

மறைமுகமாக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தைதான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் எனக் கூறப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv