Friday , March 29 2024
Home / முக்கிய செய்திகள் / முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கடும்­மழை பெய்­து­கொண்­டி­ருக்க, வெள்­ளத்­து­டன் அள்­ளுண்டு செல்­லும் அபா­யத்­துக்கு மத்­தி­யில் முத்­தை ­யன்­கட்டு காட்­டுப் பகு­தி­யில் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட மந்­தி­ர­வாதி உள்­ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உயி­ரா­பத்தை எதிர்­கொண்ட நிலை­யி­லும் பாது­காப்­பைத் தேடாது தொடர்ந்­தும் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த அவர்­களை சிர­மத்­தின் மத்­தி­யில் கயிறு கட்டி வெள்­ளத்­தி­லி­ருந்து காப்­பாற்றிய பின்­னர் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரின் நேரடி ஆலோ­ச­னை­யில் இயங்­கி­வ­ரும் பொலிஸ் சிறப்­புக் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வி­னர் அவர்­க­ளைக் கைது செய்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­ முன்­தின­ம் இ­ரவு 8 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது.

அவர்­க­ளில் ஒரு­வர் பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்­த­வர் என­வும், அவர் புதை­யல் இருக்­கும் இடத்தை சரி­யாக அடை­யா­ளம் கண்டு புதை­யலை மீட்­கும் மந்­தி­ர­வாதி என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ரி­ட­மி­ருந்து மந்­தி­ரச் சுவ­டி­கள், தங்­கம் உரசிப் பார்க்­கும் கற்­கள், தங்­கம் தூய்­மை­யாக்­கும் இர­சா­யன மருந்­து­கள் மற்­றும் திசை­ய­றி­க­ருவி என்­ப­ன­வற்றை மீட்­ட­தா­கத் தெரி­வித்­த­னர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv