Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்!

அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்!

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார்.

கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை.

முன்­னர் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யின் தலை­வ­ரும், சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­ வர்­க­ளும் கூட்­ட­ மைப்­பின் தலைமை தொடர்­பாக எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். அவர்­கள் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை. ஆனால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டே அதை மோச­மாக விமர்­சித்து வரு­கி­றார் விக்­னேஸ்­வ­ரன்.

கூட்­ட­மைப்­பில் இருந்து அவர் முத­லில் வில­க­லாமே?

மக்­கள் பலம் தம்­மு­டன் இருக்­கும்­வ­ரை­யில் தம்மை எவ­ரா­லும் அசைத்­து­விட முடி­யா­தென அவர் அடிக்­கடி கூறி வரு­கின்­றார். அவ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சியினர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­த­போது அவ­ருக்கு ஆத­ர­வாக மக்­கள் கூட்­டம் திரண்­டி­ருந்­தது உண்­மை­தான். ஆனால் அந்­தக் கூட்­டம் அவ­ருக்கு உரி­ய­தல்ல. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­ மைப்­புக்­கும் எதி­ரான கூட்­டம்­தான் அது. இதை அவர் தவ­றா­கப் புரிந்­து­ கொண்­டமை அவ­ரது அர­சி­யல் அனு­ப­வ­மின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பும், அதன் தலை­மை­யும் சரி­யில்­லை­யென்­றால் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தற்கு அவர் ஏன் தயங்­கு­கி­றார்? அவர் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது எவ­ருக்­குமே புரி­யாத மர்­ம­மாக நீடிக்­கின்­றது.

தனது செல்­வாக்­கா­கக் கரு­த­மு­டி­யுமா?

2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் வட பகுதி மக்­கள் விக்­னேஸ்­வ­ரன்­தான் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ர­வேண்­டு­மென ஒரு­போ­துமே கேட்­ட­தில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் அவரை அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கூட்­ட­மைப்­பின் தலைவர்­தான் அவரை அர­சி­ய­லுக்­குள் கொண்டு வந்தவர் என்­பது பல­ருக்­கும் தெரிந்த விட­யம். அவ­ரொரு ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர்­மீது வட­ப­குதி மக்­கள் நம்­பிக்­கை­வைத்­துத் தமது வாக்­கு­களை அமோ­க­மாக அள்ளி வழங்­கி­னார்­கள். இதை விக்­னேஸ்­வ­ரன் தனது சொந்­தச் செல்­வாக்­கா­கக் கருத முடி­யுமா?

தம்­மி­டம் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றில் ஒன்றை விரை­வில் தெரிவு செய்­யப் போவ­தா­க­வும் அவர் முன்­பொரு தடவை தெரி­வித்­தி­ருந்­தார். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது, தனிக்­கட்சி தொடர்­வது, வேறொரு கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ்­மக்­கள் பேர­வை­யின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து உழைப்­பது ஆகிய நான்­குமே அந்­தத் தெரி­வு­க­ளா­கும். தற்­போது கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளரா­கக் கள­மி­றங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார். அவரை இனி­யா­வது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் போன்­ற­வர்­கள் புரிந்­து­ கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்­பில் இருந்து விலகி விக்­னேஸ்­வ­ரன் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­வா­ரென அவர் கனவு காண்­கி­றார். ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அவ­ருக்கு அல்வா கொடுக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றார்.

பங்­கா­ளிக் கட்­சி­கள் கவ­ன­மெ­டுப்­பது நல்­லது

கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­யி­ன­ரும் தற்­போ­தைய முதல்­வரை நன்கு எடை­போட்டு வைத்­தி­ருக்க வேண்­டும். அண்­மை­யில் புளொட்­டின் தலை­வர் சித்­தார்த்­தன் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். நாமே விக்­கி­ னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­விட்டு அவ­ருக்­குத் தொல்லை கொடுப்­பது சரி­யல்­ல­வென அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், பிரச்­சி­ னை­கள் ஏற்­ப­டு­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரனே என்­பதை அவர் முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­மையை மாற்ற வேண்­டு­மெ­னக் கூறு­வ­தற்கு விக்­னேஸ்­வ­ர­னுக்­குள்ள தகு­திப்­பாட்­டைப் பரி­சீ­லிப்­ப­தும் சிறந்­தது. அந்­தத் தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு இவர் விரும்­பு­கின்­றாரோ என்­றும் கருத வேண்­டி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பைத் தாங்­கிப்­பி­டித்­துள்ள மக்­கள்­இ­வ­ரைத் தமது தலை­வ­ராக ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். ஆக, விக்­னேஸ்­வ­ர­னின் சுய­ரூ­பம் தற்­போது தெளி­வா­கத் தெரிந்து விட்­டது. அவ­ரைத் தலை­யில்­தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­கின்ற சிறு­ப­கு­தி­யி­ன­ருக்­கும் இது புரிந்­தி ­ருக்­கு­மென நம்­ப­லாம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv