ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் முக்கியமான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூட்டணியின் அரசியல் நபர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாயினும் அதனை தாம் ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.