Thursday , March 28 2024
Home / விளையாட்டு செய்திகள் / கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நேரத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெற்றி நோக்கி அணியை அழைத்து சென்றார். இருப்பினும் ஸ்கோர் 159 ஆக இருக்கும் நிலையில் அவர் அவுட் ஆனார்

இந்த நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் ஜாதவ் ரன் ஏதும் எடுக்காததால் டென்ஷன் அதிகமானது. ஆனால் 4வது மற்றும் 5வது பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை ஜாதவ் அடித்ததால் சிஎஸ்கே அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv