தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
மாதுளை பழம் – 1,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க :
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு.
செய்முறை :
மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி