Friday , April 19 2024
Home / சமையல் குறிப்புகள் / சத்துள்ள காய்கறி வடை செய்ய…!

சத்துள்ள காய்கறி வடை செய்ய…!

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :

* உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பரான காய்கறி வடை தயார்.

குறிப்பு:

நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Check Also

பட்டர் ரைஸ் செய்யும் முறை

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் …