தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி மாதம் இறந்த செய்தி பலருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மறைவு நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரின் கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கயிருக்கிறாராம்.
இப்படத்திற்காக அவர் மூன்று டைட்டில்களை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார். இப்படத்தை எடுப்பதில் மிக உறுதியாக இருக்கும் அவர். விரைவில் இப்படத்திற்காக வேலைகள் தொடங்கவுள்ளதாம்.
அவரின் உறவினர் தரப்பு இந்த தகவலை உறுதி செய்துள்ளது.