எனக்கு 20 உனக்கு 18′ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரேயா ‘மழை’ படத்தில் ரசிக்க வைத்தார். மழையில் அவர் ஆடிய பாடல்கள் மழைகாலப் பாடல்களில் பலருக்கும் ஃபேவரிட். ‘சிவாஜி’ படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தனுஷ், விஜய், விக்ரம் ஆகியோருடன் சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன் பின் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் மையம் கொண்ட ஸ்ரேயா, தற்போது ‘நரகாசுரன்’ தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.
கடலுக்கடியில் போட்டோஷூட் சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பான்டா கடல் பகுதியில் கடலுக்கடியில் நீரில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஸ்ரேயா. கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜ்கட் என்பவர் அந்த போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார்.
பிகினி உடையில் போட்டோஷூட் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரேயாவும், புகைப்படக் கலைஞர் அனுப்பும் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் கமென்டில் வர்ணித்தும், புகைப்படங்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.
ஹாலிவுட் நடிகை மாதிரி பொதுவாக இப்படி கடலுக்கடியில் போட்டோஷூட் எடுப்பதை ஹாலிவுட் நடிகைகள்தான் அதிகமாகச் செய்வார்கள். ஸ்ரேயா, திடீரென இப்படி எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை
இப்போதும் இளமை அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இப்போது இல்லை. இருந்தாலும் தான் இன்னும் இளமையாக இருப்பதைக் காட்டிக் கொள்ள இப்படி ஒரு போட்டோஷூட்டை நடத்தியிருக்கலாம்.