பிக்பாஸ் வீட்டில் குடும்ப பிரச்சனையோடு வந்தவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா பாலாஜி மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேட்டிகள் கொடுத்து வந்தார்.
பின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். 2 நாட்களுக்கு முன் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நான் எப்போதும் உன் தோழியாக இருப்பேன் என்று அவர் கூறியதை கேட்டு பாலாஜி மிகவும் மனம் உடைந்து அழுதார்.
இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் நித்யா, பாலாஜியிடம், நேற்று நீ அழுததை என்னால் பார்க்க முடியவில்லை, நீ மாறிவிட்டாய் என்று எல்லோரும் கூறுகிறார்கள் என்று மனம் நெகிழ பேசுகிறார். இதோ அந்த வீடியோ
மாற்றம் ஒன்றே மாறாதது! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/apeJKnlAmp
— Vijay Television (@vijaytelevision) August 30, 2018