Friday , April 19 2024
Home / சினிமா செய்திகள் / சிம்பு கடும் அப்செட், பிராச்சி சமாதானம் ஆனாரா? – மஹத் கொடுத்த பேட்டி

சிம்பு கடும் அப்செட், பிராச்சி சமாதானம் ஆனாரா? – மஹத் கொடுத்த பேட்டி

நடிகர் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக அவரின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியில் வந்துள்ள நடிகர் மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார். நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவரிடம் பேசிய பின் ஏற்றுக்கொண்டார்” என கூறியுள்ளார்.

தற்போது ஒன்றாக சேர்த்து விட்டீர்களா என்ற கேள்விக்கு “நாங்கள் பிரிந்தால் தானே ஒன்று சேர்வதற்கு” என கூறியுள்ளார்.

மேலும் தான் செய்ததை பார்த்துவிட்டு சிம்பு கடும் அப்செட்டில் உள்ளார் என மஹத் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv