தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிக்பாஸ், மக்கள் இருவரும் கணிப்பது எதிர்மறையாக இருக்கிறது, அதற்கு உதாரணமாக சென்ராயன் எலிமினேஷனை கூறலாம்.
ஒட்டுமொத்த மக்களும் இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று தான் நினைத்தார்கள், ஆனால் பிக்பாஸ் ஐஸ்வர்யா இல்லாமல் சென்ராயன் வெளியேற மக்களே காரணம் என கூறிவிட்டார், அதாவது கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்த எலிமினேஷன் குறித்து பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி டுவிட்டரில், ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த இந்த சப்போர்ட் நிச்சயம் மக்கள் கொடுத்தது இல்லை, பிக்பாஸ் ஒரு குழுவை வைத்து அவர்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம். நிச்சயம் இது நியாயமாக நடந்த வாக்கெடுப்பாக தெரியவில்லை என பதிவு செய்துள்ளார்.
BB team ya vachi avangalay kuda vote podalam. There are also computer scripts that can manipulate votes. This support for sure is not from public. https://t.co/JRmeovMn3Q
— Kaajal Pasupathi (@kaajalActress) September 9, 2018