பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் மஹத் வெளியேறினார். பொது மேடையில் அவர் மக்களிடம் தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். கமல்ஹாசனும் அவருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளாராம் NSK.ரம்யா. இவரும் இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த வகையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில் மஹத்தை நான் போன் செய்து திட்டினேன். அவன் மீது எனக்கு கோபம் இருக்கிறது. ரித்விகா சொன்னது போல மஹத் அப்படிப்பல்ல ஆள் கிடையாது. நல்லவன்.
நான் உள்ளே இருந்திருந்தால் மும்தாஜிடம் மஹத் அப்படி நடந்துகொள்ள விடமாட்டேன். அந்த இரு பெண்கள் (ஐஸ்வர்யா, யாஷிகா) மும்தாஜ் மீது இருக்கும் கோபத்தை மஹத் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அந்த பெண்கள் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அவர்கள் இவனை பயன்படுத்திக்கொண்டார்கள் என கூறினார்.
For all your questions about Mahat and Mumtaz, this is my answer! :)) #BiggBossTamil #BiggBoss2 #BiggBossTamil2 #biggbosstamil2 #BiggBoss @MahatOfficial #mumtaz pic.twitter.com/xA5LUyIYLn
— Ramya NSK (@SingerRamya) August 27, 2018